TNPSC Thervupettagam

உலக கடற்புல் தினம் - மார்ச் 01

March 6 , 2024 136 days 125 0
  • 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது இந்த நாளை அறிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • கடல் புற்கள் ஆனது உலகின் பல பகுதிகளில் உள்ள ஆழமற்ற நீரில் காணப்படும் கடல் வாழ் பூக்கும் தாவரங்கள் ஆகும்.
  • அவை ஆயிரக்கணக்கான மீன்கள், கடல் குதிரைகள், ஆமைகளுக்கு உணவு மற்றும் தங்குமிடங்களை வழங்குகின்றன என்பதோடு, அவை உலகின் மிகப்பெரிய மீன் வளங்களுக்கான ஆதார அமைப்பாகவும் உள்ளன.
  • அவை உலகின் கடல்சார் கரிமத்தில் 18 சதவீதம் வரை சேமித்து வைக்கக் கூடியவை என்பதால் பருவநிலை மாற்ற தாக்கங்களைச் சமாளிக்க ஒரு சக்தி வாய்ந்த இயற்கை சார்ந்த தீர்வாக அமையும்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "வளமான கடல் புல், வளமான கிரகம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்