கடல் போக்குவரத்துப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை பரப்புவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
1958 ஆம் ஆண்டில் சர்வதேச கடல்சார் அமைப்பின் மாநாடானது நடத்தப் பட்ட தினத்தினை நினைவு கூறும் வகையில் 1978 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் முறையாக உலக கடல்சார் தினமானது அனுசரிக்கப் பட்டது.
இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “Seafarers : at the core of shipping’s future” என்பதாகும்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 05 அன்று தேசியக் கடல் தினமானது அனுசரிக்கப் படுகிறது.