உலகளவில் பார்வையற்ற தன்மைக்கு இரண்டாவது முக்கியக் காரணமாகக் கண்விழி விறைப்பு நோய் (Glaucoma) உள்ளது.
உலக கண்விழி விறைப்பு நோய் வாரமானது உலக கண்விழி விறைப்பு நோய்க் கட்டமைப்பு மற்றும் உலக கண்விழி விறைப்பு நோய் நோயாளிகள் அமைப்பு ஆகியவற்றின் ஒரு கூட்டு முன்னெடுப்பாகும்.
இந்த வாரத்தின் முக்கிய நோக்கம் கண்விழி விறைப்பு நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிவதற்காக வேண்டி தொடர் கண் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அனைவரையும் வற்புறுத்துவதாகும்.
உலக கண்விழி விறைப்பு நோய் தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 12 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
கண்விழி விறைப்பு நோய் என்பது மீளாத வகையிலான பார்வையற்றத் தன்மைக்குக் காரணமான நோய்களில் ஒன்றாகும்.
ஆனால் ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டால், குறைபாடானது குறைக்கப்பட்டு, பார்வையானது பாதுகாக்கப்படும்.