TNPSC Thervupettagam

உலக கருத்தரிப்பு தினம் – செப்டம்பர் 26

September 26 , 2017 2487 days 977 0
  • கருத்தரித்தலில் பெண்களின் தன்னதிகாரம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய, பெண்கள் மற்றும் தம்பதிகள் விரும்பும் கருத்தடை சாதன அணுகல்களை உறுதிசெய்தல் மற்றும் குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தலே இத்தினத்தின் அனுசரிப்பு நோக்கமாகும்.
  • பெண்களை அவர்கள் எப்போது, எத்தனை குழந்தைகள் மற்றும் கருத்தரிப்பு தேவையா என அனுமதிப்பது உலக சுகாதார நல இலக்குகளுக்கான முன்னேற்றத்தை உறுதி செய்யும்.
தமிழ்நாட்டில் தற்போதைய நிலை:
  • சமீபத்திய தேசிய குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பின்படி, (National Family Health Survey) தமிழகத்தில் அனைத்து வித கருத்தடை சாதன பயன்பாடு கடந்த பத்தாண்டுகளில் 8 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
  • தற்போது, 5.5 சதவீதத்திலிருந்த பெண்களுக்கான கருத்தடை விகிதம்4% ஆக குறைந்துள்ளது.
  • 4% சதவீதத்திலிருந்த ஆண்களுக்கான கருத்தடை விகிதம்
  • 0% ஆக குறைந்துள்ளது.
  • 2005-06ல்4% என்ற அளவிலிருந்த அனைத்துவித குடும்பக் கட்டுப்பாட்டு முறையின் உபயோகிப்பு 2015-16ல் 53.2% ஆக குறைந்துள்ளது. (Use of any Family Planning method)
  • 18 முதல் 45 வயதுடைய பெண்களுக்கு வருடத்திற்கு 3 முறை உட்செலுத்தத்தக்க கருத்தடை சாதனங்களை இலவசமாக அளிக்கும் ‘அந்தாரா திட்டத்தை’ தமிழக அரசு அண்மையில் தொடங்கியுள்ளது.
  • குறிப்பாக, கருவுறுதல் தன்மையை நிரந்தரமாக இழக்காமல் கருவுறுதலை தள்ளிப்போட விரும்பும் பெண்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்