TNPSC Thervupettagam

உலக செவித்திறன் தினம் - மார்ச் 03

March 7 , 2025 27 days 47 0
  • இத்தினமானது கேட்கும் திறன்ஆரோக்கியம் குறித்தும், கேட்கும் திறனை இழப்பதைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வை பரப்பச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக மக்கள்தொகையில் 5 சதவீதத்திற்கும் அதிகமானோர் (தோராயமாக 43 கோடி பேர்) 'குறைபாடு மிக்க' கேட்கும் திறன் இழப்பிற்குச் சிகிச்சை பெற சில மறுவாழ்வு நடவடிக்கைகள் அவசியமாக உள்ளது.
  • 2050 ஆம் ஆண்டில் 70 கோடிக்கும் அதிகமான நபர்கள், அல்லது பத்து பேரில் ஒருவர், செவியின் கேட்கும் திறனை இழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 'குறைபாடு மிக்க' கேட்கும் திறன் இழப்பு என்று அழைக்கப்படும் ஒரு கேட்கும் திறன் இழப்பு ஆனது, சரியான கேட்கும் திறனுள்ள காதில் 35 டெசிபல் (dB) அளவினை விட குறைவான ஒலியை கேட்கும் திறன் இழப்பாக வரையறுக்கப்படுகிறது.
  • கேட்கும் திறன் இல்லாதவர்களில் சுமார் 80% பேர் மிகவும் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Changing mindsets: Empower yourself to make ear and hearing care a reality for all!" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்