TNPSC Thervupettagam

உலக தகவல் தொழில்நுட்ப காங்கிரஸ்-2018

February 22 , 2018 2341 days 1321 0
  • வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஹைதராபாத்தில் தகவல் தொழில் நுட்பம் மீதான உலக கருத்தரங்கை இந்தியப் பிரதமர் துவங்கி வைத்துள்ளார்.
  • தெலுங்கானா மாநில அரசு, நாஸ்காம் அமைப்பு மற்றும் உலக தகவல் தொழில்நுட்ப சேவை கூட்டணி (World Information Technology Service Alliance – WITSA) ஆகிவற்றின் கூட்டிணைவுடன் இந்தியா முதல் முறையாக இந்த கருத்தரங்கை நடத்தியுள்ளது.
  • இது ஆசியாவில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 2008-ல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இது நடத்தப்பட்டது.
  • இந்த கருத்தரங்கின் கருப்பொருள்- “எதிர்கால நிறுவனங்கள்” (Future Enterprises).
  • குடியுரிமை பெற்றுள்ள உலகின் முதல் மனித ரோபாவான சவூதி அரேபியாவைச் சேர்ந்த சோபியா ரோபோ இக்கருத்தரங்கில் பங்கேற்றுள்ளது.

உலக தகவல் தொழில்நுட்ப காங்கிரஸ்

  • தகவல் தொழிற்நுட்பம் மீதான உலகின் மிகப்பெரிய கருத்தரங்கான இது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
  • இதற்கு முன் இக்கருத்தரங்கு “டிஜிட்டல் உலகம்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் 2014 ஆண்டு மெக்சிகோவில் நடத்தப்பட்டது. பின் 2016ஆம் ஆண்டிற்கான மாநாடு பிரேசிலின் பிரேசிலியாவில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்