TNPSC Thervupettagam

உலக தண்ணீர்ப் பிரச்சினை

August 8 , 2019 1808 days 693 0
  • உலக வளங்கள் நிறுவனத்தின் (WRI - World Resources Institute) புதிய தரவின்படி, உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) மிகப் பெரிய தண்ணீர்ப் பிரச்சினையை எதிர் கொண்டிருக்கின்றனர். இவர்களில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.
  • ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக மொத்த தண்ணீர் விநியோகத்தில் 80 சதவிகிதத்திற்கும் மேலான நீரைப் பாசன விவசாயம், தொழிற்சாலைகள் மற்றும் நகராட்சிகள் ஆகியவை பயன்படுத்துகின்றன.
  • தற்பொழுதுள்ள நீர் விநியோகத்தில் 80 சதவிகிதம் அல்லது அதற்கும் மேலான நீரை 17 நாடுகள் பயன்படுத்துகின்றன. இந்த 17 நாடுகளில் இந்தியா 13-வது இடத்தில் இருக்கின்றது.
  • 1990 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வட இந்தியாவில் உள்ள நிலத்தடி நீர்மட்டங்கள் ஒரு ஆண்டுக்கு 8 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்து விட்டன.
  • அக்குவாடெக்ட் (Aqueduct) என்ற கூறானது WRIயினால் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நிறுவனம் “தண்ணீர் அபாய மதிப்பெண்களின்அடிப்படையில் நாடுகளை தரவரிசைப் படுத்துகின்றது. இந்த மதிப்பெண்கள் தண்ணீர் அபாயத்தின் 13 கூறுகளைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்படுகின்றன.

 


  • Post Views:
    693

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்