TNPSC Thervupettagam

உலக தற்கொலை தடுப்பு தினம் - செப்டம்பர் 10

September 15 , 2019 1841 days 463 0
  • உலக தற்கொலை தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இது உலகெங்கிலும் பல்வேறு நடவடிக்கைகளுடன், தற்கொலைகளைத் தடுப்பதற்கு உலகளாவிய அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கைகளை வழங்குவதற்கான விழிப்புணர்வு நாள் ஆகும்.
  • இதன் முதலாவது தினக் கொண்டாட்டமானது 2003 இல் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது ஆண்டுதோறும் தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கம், உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organization) மற்றும் மனநலத்திற்கான உலகக் கூட்டமைப்பு ஆகியவற்றால் இணைந்து ஒருங்கிணைக்கப் படுகின்றது.
  • ஒவ்வொரு 40 விநாடிகளிலும் ஒருவர் தற்கொலையினால் தங்களது வாழ்க்கையை இழக்கின்றார்.
  • 2019 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த WHO ஆனது “40 விநாடிகள் நடவடிக்கை” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்