TNPSC Thervupettagam

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம்

May 18 , 2019 1961 days 933 0
  • 1969 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினம் சர்வதேசத் தொலைத் தொடர்பு ஒன்றியம் (ITU - International Telecom Union) உருவாக்கப்பட்டதைக் குறிக்கின்றது.
  • மேலும் இத்தினம் 1865 ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேச தந்திப் பொறிப் பிரகடனத்தில் கையெழுத்திடப்பட்டதைக் குறிக்கின்றது.
  • இத்தினம் ITU-ன் தலைமைக் கருத்தரங்கினால் 1973 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தகவல் சமூகம் மீதான உலக மாநாடு மே 17 ஆம் தேதியை உலக தகவல் சமூக தினமாக அறிவிக்குமாறு ஐ.நா. பொதுச் சபையைக் கேட்டுக் கொண்டது.
  • 2006 ஆம் ஆண்டு முதல் மே 17 ஆம் தேதியானது தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமுதாயம் ஆகிய இரண்டிற்கான தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினத்தின் கடைபிடிப்பானது இணையப் பயன்பாடு, தகவல் தொடர்புத் தொழில் நுட்பங்கள் ஆகியவை குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துருவானது, “தரநிலை இடைவெளியை இணைத்தல்” என்பதாகும்.
  • இந்தக் கருத்துருவானது பின்வருவனவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.
    • வளர்ச்சிக்காகத் தகவலின் வலிமை
    • சிக்கலானத் தரவுகளை செயல்படக்கூடிய தகவல்களாக மாற்றுவது.
  • தலைமைக் கருத்தரங்கு என்பது ITU அமைப்பின் 4 ஆண்டு கால செயல்திட்டம் குறித்து முடிவெடுக்கும் ITU-ன் கொள்கை வகுக்கும் உச்ச அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்