TNPSC Thervupettagam

உலக தொழுநோய் தினம் – ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை

January 28 , 2019 2070 days 936 0
  • சர்வதேச அளவில் ஹன்சன் நோய் அல்லது தொழுநோய் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக தொழுநோய் தினமாக  அனுசரிக்கப்படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டில் உலக தொழுநோய் தினம் ஜனவரி 27 ஆம் தேதி நிகழ்ந்தது. மேலும் இத்தினம் இந்தியாவில் ஜனவரி 30 (மகாத்மா காந்தியின் நினைவு தினம்) அன்று அனுசரிக்கப்படவிருக்கிறது.
  • இந்த ஆண்டின் இத்தினமானது குழந்தைகளில் தொழுநோய் தொடர்பான குறைபாடுகளற்ற (சுழியம்) இலக்கின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
  • மிகக் கொடுமை வாய்ந்த பழமையான இந்த நோய் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த தினமானது 1954 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கொடையாளர் மற்றும் எழுத்தாளரான ரோல் பூலரோ என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்