இத்தினமானது ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
உலகம் முழுவதிலும் தொழுநோய் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் இத்தினமானது ஜனவரி 30 அன்று வருகிறது.
இந்த நோய் ஹான்சன்ஸ் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தப் பண்டைய கால நோயைப் பற்றி மக்களுக்குத் தெரியப் படுத்திய பிரான்சு நாட்டு மக்கள் நல ஆர்வலர் ரவுல் ஃபோல்லெரு என்பவரால் 1954 ஆம் ஆண்டில் இந்தத் தினமானது முதன்முதலாக தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, தொழுநோயாளிகள் கண்ணியமான வாழ்வை வாழ்வதற்கும் அவர்களுக்கான கண்ணியத்தை உருவாக்குவதற்கும் ஒன்றிணையுங்கள் (United for Dignity) என்பதாகும்.