ஒரு மிகப்பெரிய பலதரப்பு சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில், “உலக நெகிழி ஒப்பந்தம்” எனப்படும் ஒரு சட்டப்பூர்வப் பிணைப்பு ஒப்பந்தத்திற்கு 175 நாடுகள் ஒப்புதல் அளித்து உள்ளன.
இது ஒட்டு மொத்த பொருள் விநியோகச் சங்கிலியினை அதைச் சரிசெய்வதன் மூலம் நெகிழி மாசுபாட்டு நெருக்கடியினை ஒரு முடிவுக்குக் கொண்டு வருதலுக்கான ஒரு ஒப்பந்தமாகும்.
முதல் ஒப்பந்தம் மீதான ஒரு தீர்மானமானது கென்யாவின் நைரோபியில் உள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் சபையின் சந்திப்பில் நிறைவேற்றப்பட்டது.
முதல் ஒப்பந்தமானது, 1950களில் நெகிழி காலம் அதிகரிக்கத் தொடங்கியது முதல் உற்பத்தி செய்யப்பட்ட 9 பில்லியன் டன் நெகிழிப் பொருட்களைச் சரியான முறையில் கையாள முயல்கிறது.
தற்போது, இந்த நாடுகள் 2024 ஆம் ஆண்டுக்குள் இந்த ஒப்பந்தத்தினை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து பணியாற்றத் தொடங்கியுள்ளன.