ஓர் இயற்கை இழையாக பருத்தியின் உற்பத்தி பரிமாற்றம், வர்த்தகம் மற்றும் நுகர்வு போன்றவற்றிலிருந்து மக்கள் பெறும் நன்மைகளைக் கொண்டாடும் விதமாக சர்வதேச பருத்தி தினம் கொண்டாடப்படுகிறது.
உலக பருத்தி தினத்திற்கான முன்னெடுப்பு 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
துணை சஹாரா ஆப்பிரிக்காவின் 4 பருத்தி உற்பத்தி நாடுகளான பெனின், புர்கினா ஃபாசா, சாத் மற்றும் மாலி ஆகியவை அக்டோபர் 07 ஆம் தேதியினை உலக பருத்தி தினமாக கொண்டாட ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தன.
இந்த நாடுகள் காட்டன் ஃபோர் (Cotton Four) என்று அழைக்கப்படுகின்றன.