உலக பவளப்பாறை கண்காணிப்பு கட்டமைப்பு
October 14 , 2021
1012 days
563
- உலக பவளப்பாறை கண்காணிப்பு கட்டமைப்பானது உலகம் முழுவதுமுள்ள பவளப் பாறைகளின் நிலை குறித்து ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
- இந்த அறிக்கையானது 13 ஆண்டுகளில் முதல்முறையாக உலக வெப்பமயமாதலின் மோசமான விளைவுகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
- கடந்த 10 ஆண்டுகளில் உலகம் தனது பவளப்பாறைகளில் சுமார் 14 சதவீதத்தினை இழந்துள்ளது.
- கடலின் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வினால் ஏற்படும் பவள வெளுப்பு நிகழ்வுகள் தான் பவளப்பாறை அழிவிற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
- திடமான பவளப்பாறைப் பரவலில் சீரான சரிவு ஏற்பட்டுள்ளது.
- திடமான பவளப்பாறைப் பரவலானது பவளப்பாறைகளின் ஒரு ஆரோக்கியமான நிலையைக் குறிக்கும்.
- பவளப்பாறை முகடுகளில் பாசிகள் உருவாவது அந்த அமைப்புகளின் மீதான பாதிப்பினைக் குறிக்கும் ஒரு அறிகுறியாகும்.
- 2010 ஆம் ஆண்டு முதல் உலகின் பவளப்பாறைகள் மீது பாசி உருவாகும் அளவானது 20% வரை உயர்ந்துள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/14-77.jpg)
Post Views:
563