இத்தினமானது உலகெங்கிலும் உள்ள வாகன ஓட்டிகள் தங்களது மகிழுந்துகளை ஒரு நாள் மட்டும் இயக்காமல் இருக்குமாறு ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது.
காற்று மாசுபாட்டுக் குறைவு மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றினை ஊக்குவித்தல் போன்ற பல நன்மைகளை மக்களுக்கு இத்தினமானது எடுத்துரைக்கிறது.