உலகளாவிய மக்கள்தொகைப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
"8 பில்லியன்கள் மக்கள்தொகை கொண்ட உலகம்: அனைவருக்குமான ஒரு நெகிழ் திறன்மிக்க எதிர்காலத்தை நோக்கி - வாய்ப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் அனைவருக்குமான உரிமைகள் மற்றும் தேர்வுகளை உறுதி செய்தல்" என்ற ஒரு கருத்துருவின் கீழ் இத்தினமானது கொண்டாடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது 1989 ஆம் ஆண்டில் "உலக மக்கள் தொகைத் தினத்தை" அனுசரிக்கத் தொடங்கியது.
1987 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதியன்று உலக மக்கள் தொகையானது 5 பில்லியனை எட்டிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்தத் தினத்தினை 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அங்கீகரித்துள்ளது.