1951 ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக மக்கள்தொகை வளங்கள் அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டு வருகிறது.
2050 ஆம் ஆண்டு வரையில், உலக மக்கள்தொகையில் ஏற்படும் பாதிக்கும் மேலான உயர்வானது வெறும் எட்டு நாடுகளில் மட்டுமே நிகழும்.
இவை, காங்கோ ஜனநாயகக் குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஐக்கியக் குடியரசு ஆகியனவாகும்.
2022 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 10 சதவீதமாக உள்ள 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரின் பங்கு 2050 ஆம் ஆண்டில் 16% ஆக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
அடுத்த சில தசாப்தங்களில், அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்பட உள்ள மக்கள் தொகை வளர்ச்சிக்கு இடம்பெயர்வு மட்டுமே முக்கிய உந்துதலாக இருக்கும்.
தற்போது ஈடு செய்வதற்கான கருவுறுதல் விகிதத்தை இந்தியா அடைந்துள்ளது
இது மக்கள் தொகையானது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தத் தலைமுறைக்கு ஒட்டு மொத்தமாக பதிலீடு செய்கின்ற ஒரு விகிதமாகும்.
0 முதல் 14 வயது மற்றும் 15 முதல் 24 வயதுடையவர்களின் மக்கள்தொகையானது தொடர்ந்து குறையச் செய்யும்.
வரவிருக்கும் பத்தாண்டுகளில் 25 முதல் 64 வரையில் மற்றும் 65க்கும் மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கையானது தொடர்ந்து உயரும்.
ஏற்கனவே 25 முதல் 64 வயதிற்குட்பட்டவர்களுக்கு, அவர்கள் அதிக உற்பத்தித் திறன் மற்றும் சிறந்த வருமானம் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழிவகையாக திறன் மேம்பாட்டின் தேவை உள்ளது.