ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் ஆர்பர் டே அறக்கட்டளை ஆகியவை இணைந்து மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களை ‘2021 ஆம் ஆண்டின் உலக மரங்களின் நகரங்களாக' அங்கீகரித்துள்ளன.
"ஆரோக்கியமான, நெகிழ்திறன்மிக்க மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்கச் செய்திட வேண்டி நகர்ப்புறங்களில் மரங்கள் நடுவதற்கும் அதன் மூலம் பசுமையைப் பெருக்குவதற்கும் பராமரிப்பதற்குமான அதன் உறுதிப்பாட்டிற்காக வேண்டி" இந்த இரு இந்திய நகரங்களுக்கும் இந்த அங்கீகாரமானது வழங்கப்பட்டுள்ளது.
முக்கியமாக ஹைதராபாத் நகரம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தப் பிரிவில் அங்கீகரிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
2021 ஆம் ஆண்டில், '2020 ஆம் ஆண்டிற்கான உலக மரங்களின் நகரமாக' அங்கீகாரம் அளிக்கப் பட்ட இந்தியாவின் ஒரே நகரம் ஹைதராபாத் ஆகும்.