TNPSC Thervupettagam

உலக மலேரியா அறிக்கை - WHO

November 23 , 2018 2065 days 668 0
  • உலக சுகாதார அமைப்பான (WHO – World health Organization) சமீபத்தில் உலக மலேரியா அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளைக் கொண்ட 11 நாடுகளில் 2017 ஆம் ஆண்டில் இந்தியா மட்டுமே மலேரிய நோய் பாதிப்புகளை கணிசமான அளவில் குறைத்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
  • இந்த அறிக்கையின்படி 2017 ஆம் ஆண்டில் உலக மலேரியா நோயாளிகளில் 4% நோயாளிகளை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அப்போதிலிருந்தே மலேரியாவைக் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.
  • இந்தியாவானது 2016 ஆம் ஆண்டு மட்டும் 24% என்ற அளவில் மலேரியா பாதிப்பைக் குறைத்துள்ளது. இது குறிப்பாக அதிக மலேரியா பாதிப்புக்குள்ளான ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட குறைப்பால் நிகழ்ந்தது.
  • இந்தியாவில் உள்ள மொத்த மலேரியா நோய் பாதிப்புகளில் கிட்டத்தட்ட 40% என்ற அளவை ஒடிசா பங்களிக்கின்றது.
குறிப்பு
  • 2017 ஆம் ஆண்டில், இந்தியாவானது மலேரியா நோய்த் தடுப்பிற்கான 5 ஆண்டு தேசிய யுக்திமுறைச் சார்ந்த திட்டத்தின் குறிக்கோளை மலேரியாவை ‘கட்டுப்படுத்துதல்’ என்பதிலிருந்து ’அகற்றுதல்’ என மாற்றிக் கொண்டது.
  • இது 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 628 மாவட்டங்களில் 571 மாவட்டங்களில் இருந்து மலேரியாவை ஒழிக்கும் இலக்குகளைக் கொண்ட செயல்முறைகளை வழங்கியது.
  • 2018 ஆம் ஆண்டில் மலேரியா அற்ற நாடாக பராகுவேயை WHO அறிவித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இந்த நிலையைப் பெற்ற அமெரிக்க கண்டத்தின் முதல் நாடாக பராகுவே ஆகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்