மிதிவண்டியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்தத் தினமானது "மிதிவண்டியின் மீதான தனித்துவம், அதன் நீண்ட நாள் உழைக்கும் திறன் மற்றும் பல்வகை உபயோகம்" ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் 72வது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.