TNPSC Thervupettagam

உலக விலங்குவழி நோய்கள் தினம் - ஜூலை 06

July 6 , 2019 1912 days 538 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 06 அன்று உலக விலங்குவழி நோய்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது லூயிஸ் பாஸ்டர் என்பவர் ரேபிஸ் என்ற ஒரு விலங்கு வழி நோய்க்கு எதிரான முதலாவது தடுப்பூசியைக் கண்டுபிடித்த 1885 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதியை அனுசரிக்கின்றது.
  • இத்தினம் விலங்கு வழி நோயின் அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
  • புதிய அல்லது வளர்ந்து வரும் நோய்களில் 75 சதவிகிதம் விலங்குகளில் இருந்து உருவாகின்றன.
  • மனிதர்களில் கண்டறியப்பட்ட தொற்று நோய்களில் வெறி நாய்க்கடி, படர்தாமரை மற்றும் சால்மோனல்லா போன்ற 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தொற்றுநோய்கள் விலங்குகளிடமிருந்துப் பரவுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்