TNPSC Thervupettagam

உலகச் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம் - மே 08

May 12 , 2024 68 days 155 0
  • சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை இயக்கத்தின் மனிதாபிமானப் பணிகள் மற்றும் கொள்கைகளை மதிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அனைத்தும் 1859 ஆம் ஆண்டில் சுவிஸ் தொழிலதிபரான ஹென்றி டுனான்ட் இத்தாலியில் நடைபெற்ற சோல்ஃபெரினோ போரின் பயங்கரத்தை எதிர்கொண்டதை அடுத்து தொடங்கியது.
  • பெரும் உத்வேகம் பெற்ற டுனன்ட்டின் கருத்துக்கள், 1863 ஆம் ஆண்டில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) உருவாவதற்கு வழி வகுத்தது.
  • 1946 ஆம் ஆண்டில், ஹென்றி டுனான்ட்டின் பிறந்தநாளான மே 08 ஆம் தேதியினை செஞ்சிலுவைச் சங்கத்தை கௌரவிக்கும் தினமாகக் கொண்டாடுவதற்கான பெரும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் உலகச் செஞ்சிலுவை தினம் கொண்டாடப் பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "I give with joy, and the joy I give is a reward" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்