உலகத் தரநிலைகள் தினம் (அ) சர்வதேசத் தரநிலைகள் தினமானது ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
உலக நாடுகளின் நுகர்வோர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் தொழில் துறைகளுக்குத் தரநிலைப் படுத்துதலின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு விழிப்பு உணர்வினை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு “நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கான தரநிலைகள் – சிறந்த உலகிற்கான ஒரு பகிரப்பட்ட குறிக்கோள்” என்பதாகும்.
முதலாவது உலகத் தரநிலைகள் தினமானது 1970 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.