TNPSC Thervupettagam

உலகத் தாய்மார்கள் தினம் – மே 12

May 29 , 2019 1950 days 480 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகத் தாய்மார்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டு இத்தினமானது மே 12 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • இது உலகம் முழுவதுமுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் மரியாதை செலுத்துவதற்காகவும் தாய்மையைக் கௌரவிப்பதற்காகவும் அனுசரிக்கப்படுகின்றது.
  • 1872 ஆம் ஆண்டில் எழுத்தாளர் ஜுலியா வார்டு ஹாவ் என்பவர் தாய்மார்கள் தினம் குறித்த ஒரு கருத்தை முதன்முதலில் தெரிவித்ததற்காக அறியப்படுகின்றார்.
  • 1908 ஆம் ஆண்டில் அண்ணா ஜார்விஸ் என்பவர், சமூக மற்றும் சுகாதார ஆர்வலரான தனது தாயைக் கௌரவிப்பதற்காக அமெரிக்காவின் தேசிய விடுமுறைக்காக ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
  • பிறகு 1914-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான உட்ரோ வில்சன் தாய்மார்கள் தினம் குறித்த அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு, மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றைத் தாய்மார்கள் தினமாகத் தேர்ந்தெடுத்தார். இவர் தாய்மார்களைக் கௌரவிப்பதற்காக இத்தினத்தை தேசிய விடுமுறையாக அறிவித்தார்.
  • பின்னாளில் தாய்மார்கள் தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுவது நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்