TNPSC Thervupettagam

உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீடு 2023

May 7 , 2023 439 days 242 0
  • ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் (RSF) எனப்படும் சர்வதேச ஊடகக் கண்காணிப்பு அமைப்பானது இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தக் குறியீட்டில் இடம் பெற்ற 180 நாடுகளில் இந்தியா 161வது இடத்தில் உள்ளது.
  • ஊடகச் சுதந்திரத்தினைப் பொறுத்தவரை சிறப்பானச் செயல்பாட்டுடன் பாகிஸ்தான் 150வது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியா 150வது இடத்தில் இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டில் 146வது இடத்தில் இருந்த இலங்கை மிகப்பெரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் இந்த ஆண்டு 135வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • நார்வே, அயர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகியவை இந்தக் குறியீட்டில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
  • வியட்நாம், சீனா மற்றும் வடகொரியா ஆகியவை கடைசி மூன்று இடங்களைப் பெற்று உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்