உலகப் பறவைகளின் நிலை என்பது சுற்றுச்சூழல் வளங்களின் மீதான ஒரு வருடாந்திர மதிப்பாய்வு ஆகும்.
இது BirdLife International என்ற நிறுவனத்தின் புகழ்வாய்ந்த ஒரு அறிவியல் பதிப்பாகும்.
‘உலகப் பறவைகளின் நிலை’ என்ற ஓர் புதிய மதிப்பாய்வின்படி, உலகளவில் தற்போதுள்ள பறவை இனங்களில் தோராயமாக 48% இனங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக அறியப்படுகிறது அல்லது கருதப்படுகிறது.
கண்டறியப்பட்ட 10,994 பறவை இனங்களில் ஏறக்குறையப் பாதி இனங்கள் இயற்கை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் விரிவடைந்து வரும் மனிதத் தாக்கம் காரணமாக இந்த அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
146 இனங்கள் மீதான சமீபத்திய வருடாந்திரப் போக்குகள் கணக்கிடப்பட்ட நிலையில் இந்தியாவில் பறவைகளின் பன்முகத்தன்மை குறைந்து வரும் போக்கு மிக ஆபத்தான ஒன்றாக உள்ளது.
இவற்றுள், கிட்டத்தட்ட 80% அளவிலான பறவை இனங்கள் எண்ணிக்கையில் குறைந்து வருவதோடு, கிட்டத்தட்ட 50% அளவிலான பறவை இனங்கள் வலுவான சரிவினைக் கண்டுள்ளன.
ஆய்வு செய்யப்பட்ட உயிரினங்களில் 6 சதவீதத்திற்கும் மேலானவை நிலையான எண்ணிக்கையைக் கொண்டுள்ளதோடு, மேலும், 14% இனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்குகளைக் கொண்டுள்ளன.
உலகில் எஞ்சியிருக்கும் பறவை இனங்களில் 14 சதவீதத்தினை மனிதர்கள் உணவாக உட்கொள்கின்றனர்.