TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரியப் பட்டியலுக்கான பரிந்துரை

September 15 , 2022 674 days 398 0
  • 2022-2023 ஆம் ஆண்டிற்கான உலகப் பாரம்பரியத் தளங்களாகப் பரிசீலிப்பதற்காக இந்தியாவின் பரிந்துரையாக கர்நாடகாவில் உள்ள பேலூர், ஹலபேடு மற்றும் சோமநாதபுரத்தின் ஹொய்சாலா கோவில்கள் ஆகியவை இறுதி செய்யப்பட்டுள்ளன.
  • இந்த மூன்று ஹொய்சாலா கோயில்களும் இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாக்கப் பட்ட நினைவுச் சின்னங்களாகும்.
  • ஹொய்சாலா கோவில்கள் இந்தத் தகுதிநிலையினை அடைந்தால், இந்த நினைவுச் சின்னங்கள் மாநிலத்தின் உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும்.
  • இப்பட்டியலில் இடம் பெற்ற மற்ற மூன்று தளங்கள்
    • விஜயநகரத்தின் ஹம்பி நினைவுச் சின்னங்கள்
    • சாளுக்கியர் காலத்தினைச் சேர்ந்த பட்டாடக்கல் கோயில் வளாகம் மற்றும்
    • மேற்குத் தொடர்ச்சி மலைகள்
  • உலகப் பாரம்பரியத் தளம் என்பது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் சிறப்புப் பாதுகாப்பு தேவைப்படுகின்ற, இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி அல்லது இடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்