சர்வதேசப் பால் பண்ணைக் கூட்டமைப்பின் 2022 ஆம் ஆண்டு உலகப் பால்வள உச்சி மாநாட்டினைத் தேசியத் தலைநகரப் பிராந்தியத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இந்திய அரசு நடத்தவுள்ளது.
1974 ஆம் ஆண்டில் புது டெல்லியில் நடைபெற்ற உலகப் பால்வள உச்சி மாநாட்டிற்குப் பிறகு இந்தியாவில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
உலகப் பால் உற்பத்தியில் இந்தியா 23% பங்களிப்பை வழங்கி, உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது.
பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள முதல் 3 மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியனவாகும்.