TNPSC Thervupettagam

உலகப் புகையிலைப் பெருந்தொற்று 2023

August 5 , 2023 349 days 252 0
  • உலக சுகாதார அமைப்பானது, உலகப் புகையிலைப் பெருந்தொற்று, 2023: புகையிலைப் புகையிலிருந்து மக்களை நன்குப் பாதுகாத்தல் என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு ள்ளது.
  • 2007 ஆம் ஆண்டில் 22.8 சதவீதமாக இருந்த புகை பிடிப்பவர்களின் உலகளாவிய விகிதம் 2021 ஆம் ஆண்டில் 17 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • நெதர்லாந்து, மொரிஷியஸ், பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மட்டுமே உலகளவில் புகையிலைப் புகைப்பதைக் குறைப்பதற்காக என்று பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும்  செயல்படுத்துகின்றன.
  • புவியில் உள்ள 10 பேரில் ஏழுக்கும் அதிகமானோர் (5.6 பில்லியன்) தற்போது புகையிலைப் புகையினால் ஏற்படும் ஆபத்துகளைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளால் பாதுகாக்கப்படுகிறார்கள்.
  • ஒவ்வோர் ஆண்டும் 8.7 மில்லியன் மக்கள் புகையிலை தொடர்பான நோய்களால் இறக்கின்றனர்.
  • 44 நாடுகளில் உள்ள 2.3 பில்லியன் மக்கள் உலக சுகாதார அமைப்பின் புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப் படாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
  • 74 நாடுகளில் அத்தகைய தயாரிப்புகளின் பயன்பாட்டினைத் தடுப்பதற்கான விதி முறைகள் அதாவது பொது இடங்களில் புகையிலையினைப் பயன்படுத்தத் தடை, அறிவிப்புப் பலகைகள் வைத்தல் மற்றும் விளம்பரங்கள் மீதான தடை போன்ற  நடவடிக்கைகள் எதுவும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்