தெலுங்கானா தலைமை புத்தாக்க அதிகாரி சாந்தா தௌதம் முதலாவது பிரிக்ஸ் புத்தாக்க மன்றத்தில் உலகப் புத்தாக்க விருதைப் பெற்றுள்ளார்.
4 வது நிலையான மேம்பாட்டு இலக்கில் அவர் ஆற்றிய சிறந்தப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
SDG-4 இலக்கானது, உள்ளார்ந்த மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்து, அனைவருக்கும் வாழ்நாள் முழுவதுமான பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதை மேம்படுத்துகிறது.
உலகப் புத்தாக்க விருதானது, சர்வதேசத் தன்னார்வ தொண்டு நிறுவனமான உலக மேம்பாட்டு அமைப்பால் நிறுவப்பட்டதாகும்.