TNPSC Thervupettagam

உலகப் போதைப்பொருள் பயன்பாடு குறித்த அறிக்கை 2022

July 8 , 2022 743 days 445 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலகப் போதைப்பொருள் அறிக்கை ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தினால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • கஞ்சாவைச் சட்டப்பூர்வமாக்குவது என்பது அதன் தினசரிப் பயன்பாடு மற்றும் அது தொடர்பான உடல்நலப் பாதிப்புகளை அதிகரித்துள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது.
  • ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில், 35 வயதிற்குட்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் போதைப் பொருள் பயன்பாட்டுக் கோளாறுகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • உலகளவில் 2 மில்லியன் அளவில் போதை மருந்துகளை ஊசி மூலம் செலுத்திக் கொள்கின்றனர்.
  • இந்த எண்ணிக்கையில் பாதி பேர் ஹெபடைடிஸ் சி வகையினாலும், 1.4 மில்லியன் பேர் எச்.ஐ.வி தொற்றினாலும் மற்றும் 1.2 மில்லியன் பேர் எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் சி ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 2019 ஆம் ஆண்டில் 11 சதவீதமாக இருந்த கோகோயின் உற்பத்தியானது 2020 ஆம் ஆண்டில் 1,982 டன்களாக அதிகரித்துள்ளது.
  • 2020-2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ஓபியம் உற்பத்தியானது ஏழு சதவீதம் அதிகரித்துள்ளது.
  • முக்கியமாக ஆப்கானிஸ்தானில் அதன் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக இந்த அதிகரிப்பானது ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்