இது சமீபத்தில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை ஆகும்.
மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் சராசரி ஊதியமானது நோய்த் தொற்றின் காரணமாக 2020 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் குறைவாக அல்லது மிக மெதுவாக வளர்ந்து வருகின்றது.
குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள், பொதுவாகப் பெண்கள், பணி நேர இழப்புகளினால் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
வங்கத் தேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் திறனுள்ள வகையில் செயல்பட்டுள்ளனர்.
ஆனால் வங்க தேசமானது ஆசிய-பசிபிக் நாடுகளில் மிகப்பெரிய அளவில் ஊதிய இழப்பைப் பதிவு செய்துள்ளது.
இதற்கு அடுத்து இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.