உலக சுகாதார அமைப்பானது உலகளாவிய புகையிலைப் பயன்பாடு குறித்த போக்குகள் என்ற தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, உலகளவில் புகையிலையைப் பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கையானது தற்பொழுது முதன்முறையாகக் குறைந்துள்ளது.
உலகில் உள்ள அனைத்துப் பகுதிகளை விடவும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் புகையிலை அதிகம் பயன்படுத்தப் படுகின்றது.
இந்த அறிக்கையின் படி, 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் புகையிலைப் பயன்பாட்டுக் குறைப்பான 30% என்ற இலக்கை அடைவதற்கான இந்தியாவின் பயணம் வழி தவறி இருக்கின்றது.
இந்த இலக்கை அடைவதற்கான சரியான வழியில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரே பகுதி அமெரிக்கா ஆகும்.