இந்தியாவில் பிறந்தவரும் கூகுள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுந்தர் பிச்சை மற்றும் NASDAQ-ன் தலைவரான அதேனா ப்ரைடுமேன் ஆகிய இருவரும் USIBC-ன் புகழ்பெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவியத் தலைமையாளர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதானது இரு நாடுகளுக்கும் இடையே வணிக மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள சிறந்தப் பெருநிறுவன நிர்வாகிகளை அங்கீகரிக்கிறது.
வாஷிங்டனைச் சார்ந்த ஆலோசனைக் குழுவான அமெரிக்க – இந்தியா வர்த்தகக் குழுமமானது (US India Business Council-USIBC) இந்த விருதுகளை வழங்குகின்றது.
இந்த விருதானது 2007 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.