இந்திய-அமெரிக்கப் பள்ளி மாணவியான சென்னையினைச் சேர்ந்த நடாஷா பெரிய நாயகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக "உலகின் அறிவுத் திறன் மிக்க" மாணவர்கள் பட்டியலில் இடம் பிடித்து உள்ளார்.
13 வயதான நடாஷா, நியூ ஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் எம் கவுடினியர் நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்தப் பட்டியலை அமெரிக்காவில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் ஃபார் டேலண்டட் யூத் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
இது 76 நாடுகளில் உள்ள 15,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் மேல்நிலைத் தேர்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இப்பட்டியலானது தயாரிக்கப் பட்டது.
அவரது சமீபத்தியத் தேர்வு பங்கேற்பில் இவர் அனைத்து மாணவர்களை விடவும் அதிக மதிப்பெண்களைப் பெற்றார்.