TNPSC Thervupettagam

உலகின் தெற்கு நாடுகளின் கடன் பிரச்சனை

September 8 , 2023 316 days 208 0
  • G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் மற்றும் அரசத் தலைவர்களின் 18வது உச்சி மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெறவுள்ளது.
  • பருவநிலை, பசுமை மேம்பாடு, எண்ணிமப் பொருளாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப் பட உள்ளது.
  • பல வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான மற்றும் பொருளாதார முடக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய கடன் பிரச்சனையானது இந்த பேச்சுவார்த்தையில் இடம் பெறும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
  • வெளிநாட்டுக் கடன் என்பது செல்வ வளமிக்க நாடுகள், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற பலதரப்புக் கடன் வழங்கு நிறுவனங்கள் அல்லது வங்கிகள் போன்ற தனியார் கடன் வழங்கு நிறுவனங்களிடமிருந்துப் பெறப்பட்ட கடன் ஆகும்.
  • இந்த நாடுகளில், பெரும்பாலும் உலகின் தெற்கு நாடுகளில், 2011 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கடன் விகிதம் 150% உயர்ந்து, கடந்த 25 ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
  • ஜாம்பியா நாடானது ஜூன் மாதத்தில், "பாரீஸ் கிளப்" எனப்படும் பல்வேறு முக்கியக் கடன் வழங்கும் நாடுகளுடன் 6.3 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
  • அந்த நாட்டிற்கு கடன் வழங்கும் மற்றுமொரு பெரிய இருதரப்புக் கடன் வழங்கும் அமைப்பு சீனாவாகும்.
  • கானா, அடுத்த மூன்று ஆண்டுகளில் அதன் சர்வதேசக் கடன் தொகையினை 10.5 பில்லியன் டாலர் வரை குறைக்க உள்ளதாக இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • 2024 ஆம் நிதியாண்டில் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கும் மற்ற கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பாகிஸ்தான் நாட்டிற்கு 22 பில்லியன் டாலர்கள் தேவைப் படுகிறது.
  • கென்யாவின் பொதுக் கடன் ஆனது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத் தட்ட 70% ஆக உள்ளது.
  • லெபனான் நாடானது, 2020 ஆம் ஆண்டு முதல் தெளிவான தீர்மானம் எதுவும் கிட்டாமல் திவால் நிலையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்