உலகின் மிகப்பெரிய இஸ்லாமியக் கூட்டமான நான்கு நாட்கள் நடைபெறும் ஆல்மி தப்லிகி இஜ்திமா என்ற சமயம் சார்ந்த கூட்டமானது மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் தொடங்கியுள்ளது.
54 நாடுகளைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு முக்கியமான மதம் சார்ந்த மற்றும் ஆன்மீகம் சார்ந்த செய்திகளை வழங்குவதற்கான ஒரு மன்றமாகும்.
போபாலில் நவாப்களின் சகாப்தத்தில் இஜ்திமா தொடங்கியது. இப்போது உலகளவில் அது போபாலின் அடையாளமாக மாறியுள்ளது.
முதலாவது "ஆல்மி தப்லிகி இஜ்திமா" ஆனது 1944 ஆம் ஆண்டு போபாலில் நடந்தது. அப்போது 14 நபர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.