உலகின் முதல் மீன்பிடிப் பூனைக் கணக்கெடுப்பானது, ஒடிசாவில் உள்ள சிலிக்கா ஏரியில் மேற்கொள்ளப் பட்டது.
இது உலகின் முதல் மீன்பிடிப் பூனைக் கணக்கெடுப்பினை வழங்கியது.
இந்த ஏரியில் 176 மீன்பிடிப் பூனைகள் உள்ளன.
சிலிக்கா ஏரியானது ஒடிசாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி ஆகும்.
மேற்கு வங்காள மாநிலமானது 2012 ஆம் ஆண்டில், மீன்பிடிப் பூனைகளை தனது மாநில விலங்காக அறிவித்தது.
சிலிக்கா அதிகாரிகள் 2020 ஆம் ஆண்டில் மீன்பிடிப் பூனைகளை அந்த ஏரியின் தூதர் என்று அறிவித்தனர்.
மீன்பிடிப் பூனைகள் உலகம் முழுவதும் அருகி வரும் இனமாக உள்ளன.
அவை வாழும் நாடுகளின் எல்லைக்குள், அவை சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்கள் அடங்கிய சிவப்புப் பட்டியலில் பாதிக்கப்படக் கூடிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மீன்பிடிப் பூனை என்பது 1972 ஆம் ஆண்டின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான முதல் அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஒரு இனமாகும்.