உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட “மேம்படுத்தப்பட்ட இலகுரக கடற்கணை - சய்னியா” என்பதின் (Advanced Light Torpedo (TAL) Shyena) முதலாவது சோதனையானது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இது இந்தியக் கடற்படையில் இலியுஷின் I1-38 (Ilyushin Il-38) என்ற ரோந்து விமானத்திலிருந்துச் செலுத்தப் பட்டது.
TAL – சய்னியா என்பது கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தினால் (NSTL - Naval Science and Technological Laboratory) மேம்படுத்தப்பட்ட ஒரு நீர்மூழ்கி எதிர்ப்புக் கடற்கணையாகும்.
NSTL என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு ஆய்வகம் ஆகும்.
இந்தியாவில் இதுபோன்ற ஒரு சோதனை நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.
TAL சய்னியா ஆனது பொருத்தப்பட்ட இலகுரக விமானத்திலிருந்துச் செலுத்தப்பட்டது.