பொது வேலைவாய்ப்புகளில், 13 பட்டியலிடப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு 100% இடஒதுக்கீடு வழங்குவதாக ஜார்க்கண்ட் அரசு 2016 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிவிப்பினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
அரசின் முடிவானது பாரபட்சமானது மற்றும் அனுமதிக்க முடியாதது என்று கூறிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை இந்தத் தீர்ப்பானது உறுதி செய்தது.
இந்த அறிவிப்பானது அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் இந்திய அரசியல் அமைப்பின் 14, 16(2), 16(3) மற்றும் 35 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானதாகும்.
1992 ஆம் ஆண்டு இந்திரா சாஹ்னே வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள படி இட ஒதுக்கீட்டிற்கான அதிகபட்ச வரம்பு 50% ஆகும்.
2016 ஆம் ஆண்டில், ஜார்க்கண்ட் அரசானது, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT) பதவிகளுக்கு மாநிலத்தில் உள்ள 13 பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 100% இடஒதுக்கீட்டுடன் நியமனம் செய்வதற்காக வேண்டி அதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவிப்பினை வெளியிட்டது.