TNPSC Thervupettagam

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கானத் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் - நவம்பர் 02

November 4 , 2023 292 days 159 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது (UNGA) 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதையடுத்து இத்தினம் நடைமுறைக்கு வந்தது.
  • இந்தத் தினமானது, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை இன்மை மீதான கவனத்தை ஈர்க்கிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை, நேர்மையான தேர்தல் முறை மற்றும் பொதுத் தலைமையின் பெரும் பங்கு என்பதாகும்.
  • 2020-2021 ஆம் ஆண்டில் 117 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  • 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 38% கொலைகள் நடந்துள்ள நிலையில் அதைத் தொடர்ந்து ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் 32% கொலைகள் நடந்துள்ளன.
  • 2021 ஆம் ஆண்டில், கொல்லப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களிலும் பெண்களின்   சதவீதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில் இது முந்தைய ஆண்டில் இருந்த 6 சதவீதத்திலிருந்து 11% ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்