TNPSC Thervupettagam

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் புறக்கணிப்பு – அறிக்கை

March 13 , 2023 497 days 267 0
  • யுனிசெஃப் அமைப்பானது, ‘ஊட்டச்சத்து குறைபாடு மிக்க மற்றும் புறக்கணிக்கப் பட்டவர்கள்: உலகிலுள்ள இளம் பருவ வயது சிறுமிகள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்து நெருக்கடி’ என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • இது இளம் பருவ வயது பெண்கள் மற்றும் இனப்பெருக்க வயதுடைய பெண்களின் ஊட்டச்சத்து அளவில் உள்ள தற்போதைய நிலை, போக்குகள் மற்றும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஆராய்கிறது.
  • 12 நாடுகளில் 2020 ஆம் ஆண்டு முதல் 5.5 மில்லியனாக இருந்த கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பருவ வயது பெண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கையானது 6.9 மில்லியனாக அல்லது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • அந்த 12 நாடுகள்; ஆப்கானிஸ்தான், புர்கினா பாசோ, சாத், எத்தியோப்பியா, கென்யா, மாலி, நைஜர், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான் மற்றும் ஏமன் ஆகியன ஆகும்.
  • உலகளவில், 2 வயதிற்குட்பட்ட 51 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் அதாவது ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக அவர்கள் வயதிற்கு ஏற்ற உயரத்தினைக் காட்டிலும் குறைவான உயரத்தில் உள்ளனர்.
  • தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகள் ஆகியவை இளம் பருவ வயது சிறுமிகள் மற்றும் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக காணப்படும் பகுதிகளாக விளங்குகின்றன.
  • இப்பகுதியானது, உலகளவில் குறைந்த எடையால் பாதிக்கப்பட்ட மூன்றில் இரண்டு இளம்பருவ சிறுமிகள் மற்றும் பெண்களைக் கொண்ட, மேலும் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட ஐந்தில் மூன்று இளம்பருவ சிறுமிகள் மற்றும் பெண்களைக் கொண்ட நாடுகளாகும்.
  • 2021 ஆம் ஆண்டில், 126 மில்லியன் பெண்கள் ஆண்களை விட உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நிலையில் இது 2019 ஆம் ஆண்டில் சுமார் 49 மில்லியன் ஆக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்