TNPSC Thervupettagam
June 6 , 2021 1178 days 597 0
  • எக்ஸ்-ரே சேது என்பது மார்பக X-கதிர் விளக்கப் படத்தின் உதவியுடன் கோவிட் – 19 தொற்றினை முன்கூட்டியே கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவியாகும்.
  • இது கிராமப்புறப் பகுதிகளில் கோவிட்-19 தொற்றினைக் கண்டறிவதற்கு உதவும்.
  • கிராமப்புறப் பகுதிகள் RT-PCR சோதனைகள் மற்றும் சி.டி. ஸ்கேன் போன்றவை எளிதில் கிடைக்கப் பெறாதவையாகும்
  • எக்ஸ்ரே சேது வாஸ்ட்அப் மூலம் இயங்கும் ஒரு தொழில்நுட்பமாகும்.
  • வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் அனுப்பப்படும் குறைந்தத் தெளிவுத் திறனுடைய மார்பக X-கதிர் ஆய்வுப் படங்களைக் கொண்டு இது கோவிட்-19 தொற்றுடைய நோயாளிகளைக் கண்டறியும்.
  • இந்தத் தொழில்நுட்பமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தினால் நிறுவப்பட்ட ஆர்ட்பார்க் எனும் அமைப்பு, பெங்களூருவிலுள்ள சுகாதார தொழில்நுட்ப தொடக்க நிறுவனமான நிராமை மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்