கொள்கை வகுக்கும் ஒரு மையமான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் தலைமை இயக்குநரான சுனிதா நரைன் அவர்கள் இந்த ஆண்டின் எடின்பெர்க் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இந்த விருதானது ஸ்காட்லாந்தின் தலைநகரமான எடின்பெர்க் நகர மன்றத்தினால் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
மேலும் நரைன் அவர்கள் உலக பொதுக் கவன ஈர்ப்பு அறிக்கையில் வெளியிடப்பட்ட முதலாவது தேசிய காலநிலைத் தலைவர் விருதுகளில் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து “தேசியக் காலநிலைத் தலைவராக” தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறப்பானப் பங்களிப்புகளை மேற்கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப் படுகின்றது.