'அக்வேரியம் (AQVERIUM) எனப்படும் இந்தியாவின் முதல் எண்ணிம தண்ணீர் வங்கி என்பது கர்நாடகாவின் பெங்களூரு நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
இது சிறந்த நீர் மேலாண்மையை நோக்கமாகக் கொண்ட ஒரு புதுமையான முயற்சி ஆகும்.
இது அக்வாக்ராப்ட் குரூப் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
எண்ணிம தண்ணீர் வங்கி என்பதனை சில பொதுவான மேம்பாட்டு சவால்களைச் சமாளிப்பதில் மேலும் சில உதவிகளை வழங்கக் கூடிய, அனைத்து நிறுவனங்கள் மற்றும் ஆதாரங்களில் இருந்து பெறப்படும் நீர்வளத் தரவுகளின் ஒரு தொகுக்கப்பட்ட பட்டியல் என்று கொள்ளலாம்.