TNPSC Thervupettagam

எரி தரநிலை நிறுவனம் - மூடப்படுதல்

April 7 , 2018 2278 days 742 0
  • மத்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற மத்திய பொதுத்துறை நிறுவனமான (Central Public Sector Enterprise-CPSE) எரி தரநிலை நிறுவனத்தின்  (Burn Standard Company Ltd-BSCL) மூடலுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
  • அரசுத் தரப்பிடமிருந்து தொடர்ந்து நிதி உதவி மற்றும் பிற ஆதரவுகள் இருந்தும் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மோசமான செயல்முறை மற்றும் நிதியியல் செயல்பாட்டை இந்நிறுவனம் கொண்டிருப்பதனாலும் எதிர்காலத்தில் இதனுடைய மீளுதலுக்கு குறைந்த நிகழ்தகவு சாத்தியமே காணப்படுவதாலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • இரயில்வே அமைச்சகத்திற்குத் தேவையான எஃகு உற்பத்தியிலும், ரயில் சரக்குப் பெட்டிகள் (wagons) தயாரிப்பு மற்றும் பழுதுபார்ப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு செயலாற்றி வந்தது.
  • Burn and Company மற்றும் இந்திய தர வேகான் நிறுவனம் (Indian Standard Wagon Company Limited) ஆகிய நிறுவனங்களின் ஒன்றிணைவு மற்றும் தேசியமயமாக்கலுக்குப் பிறகு மத்திய கனரகத் தொழிற்சாலைத் துறையின் கீழ் 1976 ஆம் ஆண்டு எரி தரநிலை நிறுவனம் உருவாக்கப்பட்டது.
  • முந்தைய பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் மீதான நிர்வாகக் கட்டுப்பாடானது மத்திய கனரக தொழிற்துறையிடமிருந்து (Department of Heavy Industries)  மத்திய இரயில்வே அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்