இளவரசர் வில்லியம்ஸ் எர்த்ஷாட் பரிசை வென்ற ஐந்து புத்தொழில் நிறுவனங்களுள் ஓர் இந்திய நிறுவனமும் இடம் பெற்றுள்ளது.
இந்தப் பரிசானது பூமியைக் காப்பாற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறு விவசாயிகளுக்காக "ஒரு சிறு பெட்டக வடிவப் பசுமைக் குடிலினை" வடிவமைத்த இந்தியப் புத்தொழில் நிறுவனமான கெய்தி, இயற்கையைப் பாதுகாத்து அதை மீட்டு அமைப்பவை என்ற பிரிவில் பரிசினை வென்றது.
கடந்த ஆண்டு, இந்தியாவினைச் சேர்ந்த திட்டமான டக்காச்சர், நமது காற்றினைச் சுத்தம் செய்தல் என்ற பிரிவில் பரிசை வென்றது.