TNPSC Thervupettagam

ஐ.எல் அண்ட் எப்.எஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ள NCLT ஒப்புதல்

October 5 , 2018 2115 days 648 0
  • தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயமானது (NCLT - National Company Law Tribunal) ஐ.எல். அண்ட் எப்.எஸ். (IL&FS) நிறுவனத்தின் மன்ற நிர்வாகத்தை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு நிர்வகிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • IL&FS நிதிச்சேவை நிறுவனமானது கடந்த ஒரு மாதமாக கடன் வழங்கீடுகளைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளது.
  • புகழ்பெற்ற வங்கித் துறையைச் சேர்ந்தவரான உதய் கோடக் தலைமையிலான புதிய 6 உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது அந்நிறுவனத்தின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்தும்.
  • இம்மன்றக் குழுவில் அதிகபட்சமாக 10 உறுப்பினர்கள் வரை நியமிக்க பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்