ஐ.நா.வின் உயரிய அமைதிக் காப்பு விருதான “தனித்துவமான துணிவிற்கான கேப்டன் பேய் டயக்னி விருது” மறைந்த மலாவிய வீரரான ஜான்சி சிட்டிடி என்பவருக்கு வழங்கப்பட்டது.
காங்கோவில் எபோலா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் நடவடிக்கையின் போது ஒரு கும்பலிடமிருந்து தனது சக வீரரைக் காப்பாற்றி, அந்த கும்பலுக்கு எதிராகப் போரிட்ட போது இவர் உயிரிழந்தார்.
விருது பற்றி
தனித்துவமான துணிவிற்கான கேப்டன் பேய் டயக்னி விருதானது ஐ.நா.வினால் 2014 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
ருவாண்டாவிற்கான ஐ.நா. திட்டம் என்ற முன்னாள் திட்டத்தில் (UN Mission in Rwanda - UNAMIR) கேப்டன் பேய் பணியாற்றினார். 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப் படுகொலையின் போது ஆயிரக்கணக்கான ருவாண்டா மக்களை அவர் காப்பாற்றினார்.