TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கை 2025

March 27 , 2025 4 days 39 0
  • ‘Mountains and Glaciers; Water Towers’ எனப்படும் 2025 ஆம் ஆண்டு உலக நீர் மேம்பாட்டு அறிக்கையானது யுனெஸ்கோ அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • ஆசிய-பசிபிக் பகுதியானது, உலகின் மிக உயரமான மலைகள் மற்றும் பரந்து விரிந்த பனிப்பாறை அமைப்புகளுக்கு முக்கியத் தாயகமாக உள்ளது, மேலும் இது பருவநிலை மாற்றத்தினால் அதிகளவில் பாதிக்கப்படக் கூடிய ஒன்றாக உள்ளது.
  • உருகும் பனிப்பாறைகள் ஆனது, உலகெங்கிலும் உள்ள 2 பில்லியன் மக்களின் உணவு மற்றும் நீர் விநியோகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
  • இந்து குஷ் இமயமலை (HKH) பகுதியானது கடும் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரிய அளவு இழப்புகளை எதிர் கொள்கிறது என்பதோடு, இது முந்தைய தசாப்தத்தை விட 2011-2020 ஆம் ஆண்டுகளில் 65 சதவீதம் வேகமாக உருகியது.
  • 1.5°C மற்றும் 4°C வெப்பநிலைக்கு இடையில் அதிகரித்தால், உலகளவில் உள்ள மலை சார்ந்தப் பனிப்பாறைகள் 2015 ஆம் ஆண்டில் இருந்த நிலைகளுடன் ஒப்பிடும் போது 2100 ஆம் ஆண்டில் அவற்றின் மொத்த நிறைவில் சுமார் 26 முதல் 41 சதவீதம் வரையில் இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்